மே'ம்
மே மாதம் எனை ஒன்றும் செய்யாது அநாதைகளை மே மாதம் ஒன்றும் செய்யாது குழந்தைகளை ஒன்றுமே செய்யாது அநாதைகள் வளர்ந்த குழந்தைகள் சித்திரையில் பிறந்து வைகாசியில் இறந்தவள் என் அம்மா மே மாதம் என் அம்மா மாதம் அம்மா எனை ஒன்றும் செய்ய மாட்டாள் மே மாதம் என் அம்மா அம்மாவின் உக்கிரம் என்னை சுட்டதே கிடையாது என் மனைவிக்கு மே மாதம் கிலி மாதம் மாமியார் கொடுமையை பார்த்தீர்களா? அம்மா நீ செய்வது சரியில்லை என்ற முறையீட்டிற்கு பின்பு தான் பருவ மழை முந்துவது எல்லாம் நடக்க ஆரம்பிக்கிறது 'மே' பற்றிய கவிதையில் மனைவி நுழைந்த முதலே பொட்டு பொட்டாக வியர்க்க ஆரம்பித்து விட்டது கவிதை அம்மே என் கவிதையை ஒன்றும் செய்யாதே! அவளை விடுவித்துவிடுகிறேன். பதிலுக்கு வதங்கிய சில உறவுகளை துளிர்க்கவை. அந்தியில் சந்திப்போம். பய்! டடா!