Posts

Showing posts from August, 2023

கோடை கொண்டு வரும் மாற்றம்

சித்ரவேலு இந்த கோடையில் மாறிவிட்டான்  மேல் ஈறு தெரியும்படி எப்போதும் லப்பர் வாயை திறந்தே வைத்திருப்பவன் இந்த கோடையில் வாயை மூடிக்கொண்டான் மாட்டுப்பல் போன்ற தன் பற்களை இந்த கோடையில் மறைத்து கொண்டான் சித்ரவேலு எப்போதும் பேசிக்கொண்டே இருப்பான் கண்ணச்சதை ஆடும் பொய்க்கோளி புடுக்கு அவன் அறிமுகப்படுத்திய சொல்தான் அதன் பிறகு என்னை அழைத்து  புடுக்கறுத்துருவேன் என்று சொல்லச்சொல்லி அழகு பார்த்தான் இதுதான் புடுக்கு இங்க பாரு என்று ஊரணி உள்ளிருந்து எம்பி எம்பி குதிப்பான் சித்ரவேலு இந்த கோடையில் மாறிவிட்டான் சித்ரவேலு வாயை மூடிக்கொண்டான் சித்ரவேலு பேண்ட் போட்டுக்கொண்டான் வேட்டிக்கட்டுகிறான் மேல் துண்டு போடுகிறான் அப்புறம் சித்ரவேலுக்கு ஏர் நெத்தி விழுந்து கொண்டிருக்கிறது தற்போது சித்ரவேலுக்கு புடுக்கு இருக்கும் இடம் தெரியாமல் கிடக்கிறது நான் இறந்து போனதும் சித்ரவேலு பேசுவதை நிறுத்திக்கொண்டான் என்கிறார்கள் தூண்டில் போட மட்டும் இந்த ஊரணிக்கு வந்து போகிறானாம்  மிதக்கும் தட்டை சிமிட்டும் போது எதையோ நினைத்து நினைத்து அழுது கொள்கிறானாம் தலை பாரத்தோடு வரப்புகளில் தனியாக நடந்து வரும் போது எப்போதும் கேவல் சத

நான் அவ்வப்போது அம்மாவை நினைத்து அழுவேன்

தவறுக்கு பின்பு எங்கு போய்  ஒழிந்து கொள்வது அம்மே உன்னிடமே என் விளையாட்டை காட்டினால் எப்படி பிழைப்பேன் நான்  ஓடி ஓடி ஒழிந்து கொள்ள முடியுமா என்னை எப்படி பார்த்துக்கொண்டே நீ பெற்ற தாய் போல தானே  தாய் அடிக்கலாம்  சித்தி அடிக்கக்கூடாது தெரியாதா  உனக்கு ஒரு தண்டனையே என்று நான் செய்த அவச்செயல் அம்மட எண்ணம் தோன்றும் போதே  என் வாழ்நாள் நிம்மதியை இறுகப்பற்றிக் கொண்டது அதன்பின் நான் தற்சுழலில் சிக்கிக்கொண்டேன் படபடப்புடன் யோசனையில் இருக்கும் உடல்வாகை பெற்றேன் என்னை நல்லவன் என்று அழைத்தார்கள் சிறு வேலைக்கு பயன்படுத்திக்கொண்டார்கள் நான் அவ்வப்போது அம்மாவை  நினைத்து அழுவேன்  அம்மாவையேன்றால் உன்னை நினைத்து தான் அம்மே  தவறுக்கு பின்பு எங்கு போய்  ஒழிந்து கொள்வது அம்மே உன்னிடமே என் விளையாட்டை காட்டினால் எப்படி பிழைப்பேன் நான்  ஓடி ஓடி ஒழிந்து கொள்ள முடியுமா என்னை எப்படி பார்த்துக்கொண்டே நீ வாஞ்சையுடைய மகள் போல  குட்டி தங்கையைப் போல நல் காதலியைப் போல தடித்த தோல் முண்டங்களை  எருமை மாடுகளை தெரியாதா  உனக்கு ஒரு சந்தோசம் என்று நான் செய்த அவச்செயல் அம்மட எண்ணம் தோன்றும் போதே என் மீதிநாள் நிம்மதியை  கைக்கொண