ராயபுரம்
இரயில் பாலத்தின் நெற்றி மதிய உணவு நடக்கும் துணை மின் நிலையத்தினுள் வாசலில் காத்திருக்கிறது சந்தனக்கருப்புவெள்ளை பூனை ஓராள் உதவியுடன் உள்ளே நடந்து செல்கிறது ஏணி இரும்பு கதவை திறம்பட தாழிடும் காக்கி சொக்கா ஊழியன் அவன் கண்ணின் புடைத்த நரம்புகள் இது ஒரு நகர நிலக்காட்சி கவனமாக என் கண்கொண்டு பாருங்கள் பாலத்தின் நெஞ்சம் நட்ட நடுவில் நிற்கும் காவலர் கூண்டின் அடியில் அமரச் செய்து தன் குட்டி குடும்பத்துக்குக்கு ஆரத்தி எடுக்கும் மனிதனின் காட்சி பாலத்தின் புட்டம் கூட்ஸ் வண்டியே சோம்பேறி கூட்ஸ் வண்டியே எப்போதும் அண்ண ஓட்டம் தானா? உன் கோச்சுகளில் என் பாட்டனின் முதுகெலும்பை சுமந்து சென்றாய் என் தம்பியின் புஜங்களை சுமந்து சென்றாய் தற்போது லாலுவின் முறிந்த கணுக்கால்கள் மலைபோல் குவிந்து கொண்டிருக்கிறது கடைசி விசாரணை உண்மையாகவா, நீ எந்த ஊர்? உன் சொந்த ஊர்? பாட்டனெனில், உன் பாட்டனா? உன் ரத்த சொந்தமா? அதெல்லாம் தெரியாது நான் அட்டைக்கருப்பாக இருக்கிறேன் ஆதலின் அவரின் பேரன் நான். * வால்டாக்ஸ் சாலையின் நினைவுகளை இழந்து கொண்டிருக்கும் டாடி காளிதாசருக்கும் அவரின் பேரப்பிள்ளைகளுக்கும்